கோயில் வரலாறு


தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், தென்காசி - திருநெல்வேலி மெயின் ரோட்டில், ஆலங்குளம் எனும் ஊருக்கு கீழ்புறம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள‌ அருள்மிகு ஸ்ரீ வன்னிய செண்பக‌ சாஸ்தா திருக்கோயில், அய்யனார் பிறப்பு வரலாறு.

கைலாசத்தில், பகவான், பார்வதி, தேவர்கள், அனைவரும் ஆண்டு வந்த பொழுது, பூலோகத்தில் அரக்கர் வம்சத்தில் வல்லர‌க்கன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் பகவானைத் நினைத்து பன்னிரண்டு ஆண்டு காலம் கடுந்தவம் புரிந்து, பின் பகவானின் அருட்கடாச்சம் பெற்று அவன் நினைத்த வரத்தை பெற்றான்.

அதை கைலாசத்தில் பரிசோதிக்க, கைலாசம் தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்டு பயந்த பகவான் கானகத்திற்கு சென்று செவ்வரழிப்பூவின் மொட்டில் சிவலிங்கமாக மாறி மறைந்தார். அவரைக் காப்பாற்ற எம்பெருமான் கண்ணன், ஆடு மாடு மெய்ப்பவனாக வந்து அரழி மொட்டில் மறைந்திருந்த பகவானை கண்டு, ஆடு மாடுகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அரக்கனை கொல்வதற்க்கு மோகினி அவதாரமெடுத்து அவன் முன் தோன்றினார்.

மோகினியை மாலையிட நீராடிவிட்டு வந்த வல்லரக்கன், அவன் பெருவிரலை எடுத்து கண்டத்தில் வைத்தபோது அவனுடைய தலை வெடித்து கடலில் போய் விழுந்தது. இதை பகவானிடம் பெருமாள் சொல்ல, அதே வடிவம் எடுக்க பெருமாளை பகவான் வேண்ட பெருமாள் பெண்ணாகவும், பகவான் ஆணாகவும் நிற்க, இருவரும் தழுவி நிற்க, ஐந்து சாஸ்தா, அய்யனார் பிறந்தார்கள். ஆலங்குளத்தில் செண்பக குளத்துக் கரையில், வன்னிய மரத்தடியில் பிறந்ததால், அவருக்கு ஸ்ரீ வன்னிய செண்பக‌ சாஸ்தா என்று பெயர்.

 

குலதெய்வங்கள்


குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?
- சற்று ஒரு பார்வை...

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது தான் "கோத்திரன்" என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அழைத்துச் செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்கவைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூடபண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய், நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்? ஒரு குடும்பத்தைப் பொருத்த வரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. வெளிப்பட வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்‍! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்... நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி‍! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்தக் குலதெய்வ வழிபாட்டில் பலபேருக்கு நம்பிக்கை இல்லாமல் நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப்பரம்பரை வரிசையில்பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒரு நாள் நிச்சயம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு:

குலதெய்வம்: குலத்தினை காக்கும் தெய்வம் ஆகும். தெய்வதேவன் என்றும் தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்டதெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவேஎப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும். நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகளுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருஓரையில் காலபைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்தகோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும். மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக நெறியுடன் இருத்தல் வேண்டும். இவ்வாறு செய்துவரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறியவைப்பார். யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும். மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவு மற்றும் தீயபழக்கங்களை நிறுத்திய பின்பு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.


நமது ஆலயத்தில் உள்ள மற்ற சில தெய்வங்கள்



ஸ்ரீ வன்னிய செண்பக விநாயகர்,
ஸ்ரீ அய்யப்பன் சாஸ்தா,
கருமாரி அம்மன்,
ஈஸ்வரி அம்மன்,
சிவன் பெருமாள்,
பண்டார சாமி,
பேச்சி அம்மாள்,
சங்கிலி மாடசாமி,
வைரவர்,
மாடன் மாடத்தி,
கருப்பந்துரை சுடலைமாட சாமி

பகவத்கீதை



என்னைவிட மேலானது

வேறு ஒன்றும் இல்லை.

நூலிலே மணிகள் கோர்கப்பட்டிருப்பதுபோல்

இங்கே உள்ள எல்லாம்

என்னிடத்து (இறைவனிடத்து)

கோர்கப்பட்டிருக்கின்றன‌.

சிறப்பு பூஜைகள்


  • சாஸ்தா பிறந்தநாள் விழா

  • பங்குனி உத்திரம் அன்று
  • மாலை 6.00 முதல் 9.00 வரை
  • எண்ணெய் காப்பு
  • அபிஷேகம்
  • புஷ்ப அலாங்காரம்
  • பிரசாதம் படைத்தல்
  • தீபாராதனை
  • பிரசாதம் வழங்குதல்
  • நித்திய பூஜை

  • தினசரி
  • பகல் 12.00 மணிக்கு
  • எண்ணெய் காப்பு
  • அபிஷேகம்
  • புஷ்ப அலாங்காரம்
  • பிரசாதம் படைத்தல்
  • தீபாராதனை
  • மாதாந்திர பூஜை

  • தமிழ் மாத கடைசி வெள்ளி
  • இரவு 7.00 மணிக்கு
  • எண்ணெய் காப்பு
  • அபிஷேகம்
  • புஷ்ப அலாங்காரம்
  • பிரசாதம் படைத்தல்
  • தீபாராதனை
  • கொடைத் திருவிழா

  • வைகாசி மாத
  • இரண்டாவது (2 வது) வார
  • வெள்ளி, சனி, ஞயிறு கிழமைகளில்
  • விமர்சையாக நடைபெறும்
  • மூன்றாவது (3வது வார‌) வெள்ளி
  • 8ம் நாள் திருவிழா
  • மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்